குறள் எண் : 62
அறத்துப்பால்
மக்கட்பேறு / புதல்வரைப் பெறுதல் அதிகாரம்
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
விளக்கம் :
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.